/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நியமன ஆணை முதல்வர் வழங்கல்
/
பணி நியமன ஆணை முதல்வர் வழங்கல்
ADDED : பிப் 13, 2026 05:59 AM

புதுச்சேரி: வேளாண் துறையில் பணிபுரியும் 71 செயல்விளக்க உதவியாளர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி நிரந்தர பணி நியமன ஆணை வழங்கினார்.
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 2016ம் ஆண்டு முதல் 71 பேர், செயல் விளக்க உதவியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, சட்டசபையில் நிரந்தர பணி நியமன ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது, முதல்வர் ரங்கசாமி, பணி நிரந்தரம் செய்யப்பட்ட செயல் விளக்க உதவியாளர்களுக்கு களப்பணியாளராக பதவி உயர்வு அளிக்கும் வகையில், பணி நியமன விதிகளை திருத்தம் செய்து உடனடியாக பதவி உயர்வு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

