ADDED : பிப் 21, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தனியார் கம்பெனி ஊழியர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணரப்பேட்டைச் சேர்ந்தவர் சுகுமார், 43; தனியார் கம்பெனி ஊழியர். இவர் வெளியில் கடன் வாங்கியிருந்தார். இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து சுகுமார் கடந்த மாதம் 21ம் தேதி காலை 10:00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை விடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, சுகுமாரை தேடி வருகின்றனர்.