ADDED : நவ 08, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியில் சென்று காணாமல் போன தனியார் நிறுவன ஊழியரை போலீசார் தேடிவருகின்றனர்.
முதலியார்பேட்டை அய்யப்பசாமி நகரை சேர்ந்தவர், செல்வராஜ், 44; இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில், கலெக் ஷன் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். மாலை வரை வீட்டுக்கு வரவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

