ADDED : அக் 24, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மொளப்பாக்கம்-குச்சிப்பாளையம் வீரபாண்டிய கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் சதீஷ் 34, தனியார் கம்பெனி போர்லிப்ட் டிரைவர். இவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பூவிழி என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் பூவிழி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். அதிலிருந்து மனவருத்தத்தில் இருந்த சதீஷ் நேற்று முன்தினம் வீட்டில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

