/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
தனியார் பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஏப் 22, 2025 04:26 AM

புதுச்சேரி: தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று கல்வித்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 770 நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால், அங்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கோரிக்கையை வலியுறுத்தி கல்வித்துறை இயக்குனரை அலுவலகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில், தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கோர்ட் மூலம் பணிநிரந்தரம் செய்ய ஆணையை பெற்று வந்துள்ள ஆசிரியர்களுக்கு, இனியும் காலம் கடத்தாமல் பணி நியமன ஆணையை கல்வித்துறை இயக்குனர் உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.