sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

152 கடை நிலை அரசு ஊழியர்களுக்கு பல்நோக்கு ஊழியர்களாக பதவி உயர்வு

/

152 கடை நிலை அரசு ஊழியர்களுக்கு பல்நோக்கு ஊழியர்களாக பதவி உயர்வு

152 கடை நிலை அரசு ஊழியர்களுக்கு பல்நோக்கு ஊழியர்களாக பதவி உயர்வு

152 கடை நிலை அரசு ஊழியர்களுக்கு பல்நோக்கு ஊழியர்களாக பதவி உயர்வு


ADDED : மார் 05, 2024 05:07 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 152 கடை நிலை அரசு ஊழியர்களுக்கு பல்நோக்கு பொது ஊழியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு இயந்திரத்தின் கடை நிலை ஊழியர்களாக வாட்ச்மேன், சானிட்டரி அசிஸ்டண்ட், சானிட்டரி ஹெல்பர், பியூன், அட்டண்டர் உள்ளிட்ட ஐந்து பதவிகள் இருந்தன. இவை, குரூப் 'டி' என, அழைக்கப்பட்டன.

ஆறாவது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டபோது, இந்த பதவிகள் பல்நோக்கு அரசு ஊழியர்களாக, அதாவது, 'சி' குரூப் கீழ் கொண்டு வரப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது. சம்பளமும் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, சானிட்டரி அசிஸ்டண்ட், சானிட்டரி ஹெல்பர் பதவிகள் பல்நோக்கு அவுஸ்கீப்பிங் என்றும், வாட்ச்மேன் பதவி பல்நோக்கு செக்யூரிட்டி என்றும், பியூன், அட்டண்டர் பதவிகள் பல்நோக்கு பொது அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டது.

இதன்படி பல்நோக்கு அவுஸ்கீப்பிங்,பல்நோக்கு செக்யூரிட்டி பணியாற்றி வந்த 152 பேரை பல்நோக்கு பொது ஊழியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் பதவி உயர்வினை தொடர்ந்து 43 பல்நோக்கு பொது ஊழியர்கள் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பினை நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us