முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் அறிமுகம்
முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் அறிமுகம்
UPDATED : ஜூன் 13, 2026 08:46 PM
ADDED : ஜூன் 13, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கவுண்டன் பாளையம், முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித்திட்ட அறிமுக விழா நடந்தது.
பள்ளியின் தாளாளர் ரத்தின ஜனார்த்தன் தலைமை தாங்கினார். மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் விழாவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் கலைவாணி நாட்டு நலப்பணித்திட்டத்தின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைத்த கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் கவிதா முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் ஆகியோர் செய்திருந்தனர்.
