/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பைக், சொகுசு கார்களின் வாகன பதிவு வரியை உயர்த்த பரிந்துரை
/
புதுச்சேரியில் பைக், சொகுசு கார்களின் வாகன பதிவு வரியை உயர்த்த பரிந்துரை
புதுச்சேரியில் பைக், சொகுசு கார்களின் வாகன பதிவு வரியை உயர்த்த பரிந்துரை
புதுச்சேரியில் பைக், சொகுசு கார்களின் வாகன பதிவு வரியை உயர்த்த பரிந்துரை
ADDED : நவ 17, 2024 02:31 AM
புதுச்சேரியில் இன்ஜின் சி.சி., அடிப்படையிலான வாகன பதிவு வரிசை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 10 லட்சம் டூவீலர்கள், 1.5 லட்சம் கார்கள் பதிவு செய்யப்பட்டு, புதுச்சேரி மட்டுமின்றி, பிற மாநிலங்களின் சாலைகளில் ஓடுகின்றன.
இருசக்கர வாகனங்களை பொருத்தவரை இன்ஜின் சி.சி., அடிப்படையில் வாகன பதிவு வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. 170 சி.சி., வரையுள்ள பைக்குகளுக்கு 850 ரூபாய், 170 சி.சி., மேல் உள்ள டூவீலர்களுக்கு 1,200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக 1 சதவீதம் என்ற இந்த வரி, இருசக்கர வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த இன்ஜின் சி.சி., அடிப்படையிலான பதிவு வரியை கைவிட போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இனி வாகன மதிப்பில் வாகன பதிவு வரியை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. எனவே, தற்போதுள்ள 1 சதவீதத்திற்கு பதிலாக 2 சதவீதமாக வாகன பதிவு வரியை வசூலிக்க புதுச்சேரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கார்களுக்கு இணையாக பல லட்சம் மதிப்பில் சொகுசு டூவீலர்கள் சாலையில் ஓடுகின்றன. இந்த பைக்குகளுக்கு 1,200 ரூபாய் தான் பதிவு வரி வசூலிக்கப்படுகிறது. எனவே சொகுசு பைக்குகளுக்கு பதிவு வரியை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கு மேல் வாங்கப்படும் சொகுசு பைக்குகளுக்கு 8 சதவீதம் பதிவு வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 40 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள கார்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் 7 சதவீத வாகன பதிவு வரியை, 8 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 150 கோடி ரூபாய் போக்குவரத்து துறை வரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து துறை, 156 கோடியாக வருமானம் ஈட்டியது.
இந்தாண்டு 171 கோடியாக போக்குவரத்து துறை இலக்கு நிர்ணயித்துள்ள சூழ்நிலையில் இதுவரை 155 கோடியாக வருமானம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

