sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலதிபரிடம் ரூ.2.44 கோடி மோசடி செய்த நபருக்கு 'காப்பு'

/

தொழிலதிபரிடம் ரூ.2.44 கோடி மோசடி செய்த நபருக்கு 'காப்பு'

தொழிலதிபரிடம் ரூ.2.44 கோடி மோசடி செய்த நபருக்கு 'காப்பு'

தொழிலதிபரிடம் ரூ.2.44 கோடி மோசடி செய்த நபருக்கு 'காப்பு'


ADDED : நவ 01, 2025 02:32 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தொழிலதிபரிடம், 2.44 கோடி ரூபாய் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, வெங்கட்டா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். தொழிலதிபரான இவர், ஸ்ரீ சாய் டிரேடர்ஸ் நிறுவனம் மூலம் கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவைகளை வாங்கி, விற்பனை செய்து வருகிறார்.

இவரை கடந்த ஆண்டு டிசம்பரில் சந்தித்த, முதலியார்பேட்டையை சேர்ந்த செல்வம், 42, முதலியார்பேட்டை, டிஜிட்டல் அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் புவனேஸ்வர், அவரது மனைவி சுபத் ரா ஆகியோரை அறிமுகப்படுத்தி, இருவரும், பல்வேறு மாநிலங்களில் சோளம் கொள்முதல் செய்து 0வியாபாரம் செய்து வருவதாகவும், 2,500 டன் மக்காச்சோளம் வாங்கி தருவதாகவும் கூறினார் .

நம்பிய சீனிவாசன், முன்பணமாக, 2.44 கோடி ரூபாயை புவனேஸ்வர், சுபத்ரா ஆகியோரிடம் வழங்கினார். அவர்கள் கூறியபடி மக்காச்சோளத்தை வாங்கித் தரவில்லை.

சந்தேகமடைந்த சீனிவாசன், முதலியார்பேட்டையில் உள்ள டிஜிட்டல் அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது, அந்த நிறுவனம் பல மாதங்களாக மூடியிருப்பது தெரிய வந்தது. சீனிவாசன், சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார்.

தென்காசியில் பதுங்கியிருந்த செல்வத்தை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள புவனேஸ்வர், சுபத்ராவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us