நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து, புதுச்சேரி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில், அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக தலைவர் நாரா கலைநாதன் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர்கள் ஜீவானந்தம், சுதா சுந்தரராமன் முன்னிலை வகித்தனர்.
இதில் புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் சம்பத், மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.