/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்
/
கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்
ADDED : மே 23, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் திருப்பணிக்காக இந்து அறநிலைத்துறை மூலம் ரூ.8 லட்சம் நிதியுதவியை சம்பத் எம்.எல்.ஏ., வழங்கினார்.
முதலியார்பேட்டை கடலுார் சாலை, நைனார்மண்டபத்தில் அமைந்துள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் திருப்பணி துவங்க முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி, இந்து அறநிலை துறை சார்பில் கோவில் திருப்பணிக்காக ரூ. 8 லட்சத்திற்கான காசோலையை சம்பத் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இதில், கோவில் சிறப்பு அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.