sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விசைப்படகுகளை பழுது பார்ப்பதற்கு மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கல்

/

விசைப்படகுகளை பழுது பார்ப்பதற்கு மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கல்

விசைப்படகுகளை பழுது பார்ப்பதற்கு மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கல்

விசைப்படகுகளை பழுது பார்ப்பதற்கு மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கல்


ADDED : ஜூலை 22, 2025 08:15 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 08:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீன்பிடி தடைக்கால நிதி உதவிகளை முதல்வர் வழங்கினார்.

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தில் பதிவுபெற்ற மீன்பிடி விசைப்படகுகளுக்கு பழுதுநீக்குவதற்கு மர, இரும்பு மற்றும் பைபர் விசைப்படகுகளுக்கு நிதி உதவி கடந்த நிதியாண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் 2025-2026ம் ஆண்டிற்கான மீன்பிடி தடை காலத்திற்கு புதுச்சேரி பகுதியை சேர்ந்த பதிவு பெற்ற 82 விசைப்படகுகளுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் மற்றும், 42 சிறிய விசைப்படகுகளுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம், ஆக மொத்தம் ரூ.33 லட்சத்தை பதிவு பெற்ற விசைப்படகு உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு அரசின் செலவின ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதற்கான ஆணையை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் புதுச்சேரியை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்திடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை செயலர் மணிகண்டன், இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர் (இயந்திரப்பிரிவு) ராஜேந்திரன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us