/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மே 10, 2025 01:20 AM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வேளாண் உபகரணங்கள், நலத்திட்ட உதவிகளை முதல்வர், சபாநாயகர் வழங்கினர்.
ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, வேளாண் உபகரணங்கள் வழங்கு விழா அரியாங்குப்பம் தனியார் மண்டபத்தில் நடந்தது.
விழாவில், சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி, அபிேஷகப்பாக்கம் பஞ்சாயத்துக்களின் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்புக்கு, டிராக்டர், விவசாய உபகரணங்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, 41 பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பிற்கு காய்கறி விதை தொகுப்பு, சுழல் நிதிக்கான 54 லட்சம் ரூபாய் காசோலை, சமுதாய மேம்பாட்டு நிதிக்கான, 70 லட்சம் நிதி, நலிவுற்றோர் குறைப்பு நிதிக்கான 2.35 லட்சம் காசோலை, சமூதாய முதலீட்டு நிதிக்கான 20.70 லட்சத்திற்கான காசோலையை ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், வட்டா வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.