sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 நலிவுற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கல்

/

 நலிவுற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கல்

 நலிவுற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கல்

 நலிவுற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கல்


ADDED : டிச 19, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த சாத்தமங்கலம், சாத்தமங்கலம், உருவையாறு, மங்கலம், வில்லியனூர், பொறையூர், மணலிபேட் ஆகிய கிராமங்களை சேர்ந்த நலிவுற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

காலாப்பட்டு கெம்பேப் அல்கலீஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை துணை பொது மேலாளர் கண்ணப்பன், சிவில் துறை மேலாளர் இளங்கோவன், மனிதவள நிர்வாகி ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். அன்னபிரதோக் ஷனா சேவை அறக்கட்டளை நிறுவனர் பிரவீன் முன்னிலை வகித்தனர்.

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஸ்பிரேயர், 30 கிலோ விதைகள், பஞ்சகாவ்யம், மீன் அமிலம் உள்ளிட்ட மொத்தம் 20 வகையான வேளாண் இடுபொருட்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் காலாப்பட்டு கெம்பேப் அல்கலைஸ் நிறுவனம் அன்னபிரதோக் ஷனா சேவை அறக்கட்டளை இணைந்து வழங்கின. தொடர்ந்து நடந்த விவசாயிகள் கலந்துரையாடலில் உழவன் குடில் நிறுவனத்தின் நிறுவனர் முத்து இயற்கை வேளாண்மை, நிலையான விவசாய முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் லோகேஷ், சத்யா ஒருங்கிணைத்தனர். ஏற்பாடுகளை நாகராஜ், தேவராஜ் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us