/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன் வியாபாரிகளுக்கு ஐஸ் பெட்டி வழங்கல்
/
மீன் வியாபாரிகளுக்கு ஐஸ் பெட்டி வழங்கல்
ADDED : ஜூலை 30, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: நரம்பை கிராமத்தை சேர்ந்த மீன் விற்பனையாளர்களுக்கு, விலையில்லா ஐஸ் பெட்டிகளை, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன் விற்பனையாளர்களுக்கு, மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்வதற்கு விலையில்லா ஐஸ் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஏம்பலம் தொகுதி, நரம்பை கிராமத்தை சேர்ந்த மீன் விற்பனையாளர்களுக்கு, ஐஸ் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., 63 மீன் விற்பனையாளர்களுக்கு விலையில்லா ஐஸ் பெட்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மீன்வளத் துறை உதவி ஆய்வாளர் கணேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

