ADDED : செப் 29, 2024 06:30 AM

அரியாங்குப்பம், : பெண்களுக்கு திருமண உதவித் தொகை மற்றும் பாலுாட்டும் பெண்களுக்கு ஊக்கத்தொகை ஆகிய திட்டத்தின் கீழ் மொத்தம் 14.19 லட்சம் ரூபாய்க்கான அரசாணை வழங்கப்பட்டது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், பெண்கள் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ், 9 நபர்களுக்கு தலா 1 லட்சம் வீதம், 9 லட்சம் ரூபாய், பாலுாட்டும் தாய்மார்களுக்கான ஊக்கத்தொகை திட்டத்தில், 33 பெண்களுக்கு 5.19 லட்சம் என, மொத்தம் 14.19 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தவளக்குப்பம் எம்.எல்.ஏ,.அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு சபாநாயகர் செல்வம் அரசாணை மற்றும் 25 நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., ஞானசேகரன், ராமு, சுகுமார், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.