/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேலியமேடு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
/
சேலியமேடு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
ADDED : செப் 02, 2025 03:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, சீருடை மற்றும் தையல் கூலி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஆசிரியர் சரவணன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினரான லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு சீருடை மற்றும் தையல் கூலி தொகையை வழங்கினார்.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர் செல்வகுமரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.