ADDED : செப் 23, 2024 04:16 AM

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதி பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்கனுாரில் நடந்தது.
புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவு, சமூக நலத்துறை மூலம் இஸ்திரி பெட்டிகள், தள்ளுவண்டிகள், சலுான் சேர், இசைக்கருவி, முதியோருக்கான போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
முன்னதாக, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து கிராமங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி மற்றும் சிறப்பு துப்புரவு முகாமை துவக்கி வைத்தார்.
இதில், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், சமூக நலத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., நிர்வாகிகள் கலியபெருமாள், சிவக்குமார், மஞ்ஜினி, ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.