ADDED : மார் 02, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்கள் 49 பேருக்கு தலா ரூ. 18 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 8 லட்சத்து 82 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் நலத்துறை மாணவர் விடுதி வளாகத்தில் நடந்தது.
விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிக்கான உத்தரவை வழங்கினார்.

