sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

/

பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்


ADDED : அக் 16, 2024 09:59 PM

Google News

ADDED : அக் 16, 2024 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போராட்டமாக நேற்று காலை 10:00 மணிக்கு பி.ஆர்.டி.சி., பணிமனை முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொது செயலாளர் வேலய்யன் தலைமை தாங்கினார்.

சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்.போராட்டத்தின்போது பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் மகளிர் ஒப்பந்த டிரைவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை பி.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். தினக்கூலி, ஒப்பந்த டிரைவர், கண்டக்டரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

நிலுவையில் உள்ள டி.ஏ., போனஸ் வழங்க வலியுறுத்தினர்.

வரும் 24ம் தேதி ஆர்.டி.ஓ., தலைமை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம், நவ., 5ம் தேதி தலைமை செயலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், 12ம் தேதி புதுச்சேரி முழுதும் பிரசாரம், 18ம் தேதி ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us