/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., விற்பனை மேளா நாளை துவக்கம்
/
பி.எஸ்.என்.எல்., விற்பனை மேளா நாளை துவக்கம்
ADDED : அக் 19, 2024 11:51 PM
புதுச்சேரி, : புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., புதிய சிம் சிறப்பு விற்பனை மேளா நாளை துவங்கி 4 நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து முதன்மை பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல். புதிய 4ஜி சிம் சிறப்பு விற்பனை மேளா நாளை (21ம் தேதி) முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. இதற்காக, மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அருகில், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி, கரியமாணிக்கம், அரும்பார்த்தபுரம், மதகடிப்பட்டு, வில்லியனுார், ஏம்பலம், லாஸ்பேட், மடுவு பேட் ஜங்ஷன், கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு மேளாவில் புதிய சிம் கார்டு வாங்குபவர்களுக்கு மற்றும் பிற நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல்.க்கு வருபவர்களுக்கு 4ஜி சிம் இலவசமாக தரப்படும். மேலும், தற்போதுள்ள 2ஜி, 3ஜி சிம் வைத்திருப்பவர்கள் 4ஜி சிம்மாக இலவசமாக மேம்படுத்தி கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி இலவச டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம்கார்டுகள் பற்றிய விபரம் அறிந்து கொள்ள 94428 24365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.
இதற்கான குறுஞ்செய்தியையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே.