/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி -- தமிழக போலீசார் சாராய கடையில் வாக்குவாதம்
/
புதுச்சேரி -- தமிழக போலீசார் சாராய கடையில் வாக்குவாதம்
புதுச்சேரி -- தமிழக போலீசார் சாராய கடையில் வாக்குவாதம்
புதுச்சேரி -- தமிழக போலீசார் சாராய கடையில் வாக்குவாதம்
ADDED : நவ 25, 2024 04:11 AM

நெட்டப்பாக்கம்,: மடுகரை சாராயக்கடையில் இரு மாநில போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலம், மடுகரையில் கலால்துறை அனுமதி பெற்று, ஆண்டியர்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் சாராயக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை பட்டாம்பாக்கம் - மடுகரை சாலையில் தென் பெண்ணையாறு சோதனை சாவடியில் இருந்த தமிழக போலீசார், அவ்வழியாக வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர்.
அவரிடம் இருந்து, 10 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் மடுகரையில் உள்ள சாராயக்கடையில் இருந்து வாங்கி வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று முன்தினம் மதியம் மடுகரை சாராயக்கடைக்கு சென்று, அங்கிருந்த 40 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி நெட்டப்பாக்கம் எஸ்.ஐ., வீரபுத்திரன், மடுகரை எஸ்.ஐ., குப்புசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாராயக் கடையில் இருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லக்கூடாது என, தமிழக போலீசார் காரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., ரூபன்குமார், 'தமிழக பகுதியில் பாக்கெட் சாராயம் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக பகுதியில் பாக்கெட் சாராயம் பிடிப்பட்டால் அது எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்து,
தடை செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது' என்றார்.
பின், பறிமுதல் செய்த சாராய பாக்கெட்டுகளுடன், தமிழக போலீசார் கிளம்பி சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.