ADDED : ஜன 13, 2026 03:12 AM
தெரு நாய்கள் தொல்லை
வேல்ராம்பட்டு மறைமலை நகர், 6வது குறுக்கு தெருவில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சிவராம், வேல்ராம்பட்டு. அரியாங்குப்பம், அருந்ததிபுரம் ஸ்ரீராம் நகர் மற்றும் அன்னை நகரில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாரதிபிரியன், அரியாங்குப்பம்.
காலி மனையில் குப்பை
நெல்லித்தோப்பு அண்ணா நகர், 6வது தெருவில் காலி மனையில், குப்பைகள் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கலா, நெல்லித்தோப்பு.
ஆக்கிரமிப்பால் நெரிசல்
வில்லியனுார் தேரடி வீதியில், ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சரோஜா, வில்லியனுார்.
தெரு விளக்கு எரியவில்லை
அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
மணிவண்ணன், அரும்பார்த்தபுரம்.

