/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணப்பட்டு, டி.என் பாளையத்தில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவு
/
மணப்பட்டு, டி.என் பாளையத்தில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவு
மணப்பட்டு, டி.என் பாளையத்தில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவு
மணப்பட்டு, டி.என் பாளையத்தில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவு
ADDED : ஜூலை 14, 2025 03:59 AM

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மணப்பட்டு மற்றும் டி.என் பாளையம் கிராம மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய செயலர் குடே சீனிவாஸ், கலந்து கொண்டு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். துறைச் செயலர் முத்தம்மா துறையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினார்.
அரசு பட்ஜெட்டில், திட்டசெலவின ஒதுக்கீடு ரூ. 2,176 கோடியில் ரூ. 525 கோடி சிறப்பு கூறு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது திட்ட செலவில் 24 சதவீதம் ஆகும். இது நிதி ஆயோக் வழிகாட்டுதலின்படி உள்ள 16 சதவீததைக் காட்டிலும் கூடுதல் நிதி ஆகும் என்று விளக்கினார்.
கூட்டத்தில் பேசிய கவர்னர் கைலாஷ்நாதன் இந்த ஆண்டு சிறப்புக்கூறு நிதியை 100 சதவீதம் செலவு செய்வதுடன் அதனை விரைவுபடுத்த வேண்டும்.
மணப்பட்டு மற்றும் டி.என்.பாளையத்தில் இலவச மனைப்பட்டாவை இந்த மாத இறுதிக்குள் வழங்க வேண்டும். புதுச்சேரியில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்று அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், தலைமைச் செயலர் சரத் சௌகான், கவர்னரின் செயலர் மணிகண்டன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழகம், கேரளா, புதுச்சேரி மண்டல இயக்குநர் ரவிவர்மன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் கலந்த கொண்டனர்.