/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு புதுச்சேரி நபரிடம் ரூ.1.23 கோடி மோசடி
/
போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு புதுச்சேரி நபரிடம் ரூ.1.23 கோடி மோசடி
போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு புதுச்சேரி நபரிடம் ரூ.1.23 கோடி மோசடி
போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு புதுச்சேரி நபரிடம் ரூ.1.23 கோடி மோசடி
ADDED : மார் 01, 2026 05:02 AM

புதுச்சேரி: போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து பாகூரை சேர்ந்த நபர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.1.23 கோடி ஏமாந்தார்.
புதுச்சேரி, பாகூரைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, தெரிவித்தார். அதை உண்மை என நம்பி, மர்மநபர் அனுப்பிய ஆன்லைன் வர்த்தக லிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 1 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதுபோல், உறுவையாரைச் சேர்ந்தவர் 5 ஆயிரத்து 900, பாகூரைச் சேர்ந்தவர் 12 ஆயிரத்து 825 என, 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1 கோடியே 23 லட்சத்து 68 ஆயிரத்து 725 ஏமாந்துள்ளனர். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

