sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இந்திய பதிவாளர் ஜெனரலுடன் புதுச்சேரி எம்.பி., சந்திப்பு

/

இந்திய பதிவாளர் ஜெனரலுடன் புதுச்சேரி எம்.பி., சந்திப்பு

இந்திய பதிவாளர் ஜெனரலுடன் புதுச்சேரி எம்.பி., சந்திப்பு

இந்திய பதிவாளர் ஜெனரலுடன் புதுச்சேரி எம்.பி., சந்திப்பு


ADDED : மார் 22, 2025 03:33 AM

Google News

ADDED : மார் 22, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி செல்வகணபதி எம்.பி., இந்திய பதிவாளர் ஜெனரல் மிருதுஞ்சய் குமார் நாராயணனை நேரில் சந்தித்து பேசினார்.

புதுச்சேரி மாநிலம் முழுதும் உள்ள காட்டுநாயக்கன், மலைக்குரவன் மற்றும் குருமன்ஸ் சமூகத்தினரையும், ஏனாம் பகுதியில் உள்ள 'எருகுல' சமூகத்தினரையும் பழங்குடியினராகச் சேர்க்கும் திட்டத்தை இந்திய பதிவாளர் ஜெனரல் ஆராய்ந்து வருகிறார்.

இந்நிலையில், புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி, இந்திய பதிவாளர் ஜெனரல் மிருதுஞ்சய் குமார் நாராயணனை சந்தித்து பேசினார். அதில், ஏனாம் பகுதியில் உள்ளது போன்று, புதுச்சேரியிலும் எருகுல சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அதன்படி, எருகுல சமூகத்தை சேர்ந்த 125 குடும்பங்கள் ஏனாமிலும், 80 குடும்பங்கள் புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர்.

அதனை, புதுச்சேரியில் ஆய்வுக்கு வந்த மானுடவியலாளர் சத்தியநாராயணன், சமர்ப்பித்த அறிக்கையில் எருகுல சமூக மக்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எருகுல சமூக மக்கள் புதுச்சேரி மற்றும் ஏனாம் ஆகிய 2 பிராந்தியங்களிலும் வசித்து வருவது உறுதியாகியுள்ளது.

எனவே, காட்டுநாயக்கன், மலைக்குறவன், குருமன்ஸ் சமூகத்தினருடன் புதுச்சேரியில் வாழும் எருகுல சமூகத்தினரையும் சேர்த்து பழங்குடியினராக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து, உடனடியாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுகொண்டார்.






      Dinamalar
      Follow us