ADDED : ஜூலை 25, 2011 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லாஸ்பேட்டை பாலமுத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நடந்தது.
லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலை சேர்ந்த பாலமுத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 14ம் தேதி அபிஷேத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை மற்றும் மாலையில் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கடந்த 22ம் தேதி பகல் 1 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 6 மணிக்கு செடல் உற்சவமும் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு செடல் குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 23ம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும், அம்மன் வீதியுலாவும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஆறுமுகம், செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் செல்வராசு, உறுப்பினர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.