தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி நபர்களிடம் ரூ.88 ஆயிரம் மோசடி

புதுச்சேரி நபர்களிடம் ரூ.88 ஆயிரம் மோசடி

புதுச்சேரி நபர்களிடம் ரூ.88 ஆயிரம் மோசடி


ADDED : ஜூலை 22, 2025 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2025 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ.88 ஆயிரம் இழந்துள்ளது.

குயவர்பாளையத்தை சேர்ந்த ஆண் நபரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய அவர், மர்மநபர் தெரிவித்த ஆன்லைனில் ரூ.40 ஆயிரத்து 200 முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆண் நபரை, தொடர்பு கொண்ட மர்மநபர் அவரின் உறவினர் பெயரிலான வாட்ஸ் ஆப் மூலம் அவசர தேவைக்கு பணம் தேவை என கேட்டுள்ளார்.இதை நம்பி, மர்மநபருக்கு 40 ஆயிரம் அனுப்பிவிட்டு, உறவினரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவரது வாட்ஸ் ஆப் எண் ஹாக் செய்து, பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.

லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் 8 ஆயிரத்து 748 என 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 88 ஆயிரத்து 948 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us