sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆசியா அளவிலான பென்காக் சிலாட் போட்டி புதுச்சேரி வீரர்கள் பதக்கம் வென்று சாதனை

/

ஆசியா அளவிலான பென்காக் சிலாட் போட்டி புதுச்சேரி வீரர்கள் பதக்கம் வென்று சாதனை

ஆசியா அளவிலான பென்காக் சிலாட் போட்டி புதுச்சேரி வீரர்கள் பதக்கம் வென்று சாதனை

ஆசியா அளவிலான பென்காக் சிலாட் போட்டி புதுச்சேரி வீரர்கள் பதக்கம் வென்று சாதனை


ADDED : அக் 24, 2024 06:09 AM

Google News

ADDED : அக் 24, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: ஆசியா அளவிலான பென்காக் சிலாட் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஆசியா அளவிலான 8வது பென்காக் சிலாட் போட்டி, கடந்த 10ம் தேதி துவங்கி 16ம் தேதி வரை, உஸ்பெகிஸ்தான் நாட்டில் புக்காரா நகரத்தில் நடைபெற்றது.

ஜூடோ, மல்யுத்தம், பாக்ஸிங், கிக் பாக்ஸிங், டேக்வாண்டோ போட்டிகளின் கலவையாக கொண்ட இந்த பென்காக் சிலாட் விளையாட்டு போட்டியில், இந்திய அணி சார்பில் புதுச்சேரி வீரர்கள் பிரேம்குமார், பிரவீன்குமார், மணிகண்டன், ஹேமா, காவியா, ஜூவிதா, ரஜ்ஜனி, பரமேஸ்வரி, பிரித்தீ ஆகியோர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில், பிரித்தீ வெள்ளி பதக்கமும், பிரவீன்குமார் வெண்கல பதக்கமும் பெற்று இந்தியாவிற்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் பெருமையை தேடி தந்துள்ளனர்.

மேலும், இந்த போட்டியில், இந்திய பென்காக் சிலாட் கூட்டமைப்பின் சார்பில், இந்திய அணியின் மேலாளராக புதுச்சேரியை சேர்ந்த அருள்ஜோதி பங்கேற்றிருந்தார்.






      Dinamalar
      Follow us