ADDED : ஜூன் 06, 2026 04:09 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, எல்லலைப்பிள்ளைச் சாவடியில் அமைந்துள்ள சிருங்கேரி சிவகங்கா மட சாரதாம்பாள் கோவிலில் நாளை 7ம் தேதி ஸ்ரீராதா கல்யாண மகோற்சவம் நடக்கிறது.
அதனையொட்டி, நாளை மாலை 3 மணிக்கு தோடய மங்களத்துடன் திருக்கல்யாண உற்சவம் தொடங்குகிறது. தொடர்ந்து, குரு கீர்த்தனைகள், கீத கோவிந்த அஷ்டபதி, ப்ரவர லக்னாஷ்டகத்துடன் கல்யாண உற்சவம் மற்றும் டோலோற்சவம் நடக்கிறது. திருக்கல்யாண உற்சவத்தை கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியினர் நடத்தி வைக்கின்றனர்.
உற்சவ ஏற்பாடுகளை சாரதாம்பாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
