sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பின்னாட்சிக்குப்பத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

/

பின்னாட்சிக்குப்பத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

பின்னாட்சிக்குப்பத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

பின்னாட்சிக்குப்பத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்


ADDED : நவ 18, 2024 07:06 AM

Google News

ADDED : நவ 18, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்; ன்னாட்சிக்குப்பத்தில் குடியிருப்பு பகுதியில், மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏம்பலம் தொகுதி, பின்னாட்சிக்குப்பம் வி.ஐ.பி., நகர் மற்றும் அதையொட்டிய நகர் பிரிவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பணிக்காக, இந்த நகரின் அருகில் உள்ள நீர்வழி பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, அங்குள்ள முக்கிய வடிகாலுக்கு பாலம் அமைக்கப்படாமல், சாலை போடப்பட்டது.

இதன் காரணமாக, தற்போது பெய்து வரும் மழையால், பின்னாட்சிக் குப்பம் வி.ஐ.பி., நகர் மற்றும் அதையொட்டி உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் தஞ்சமடைவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

எனவே, குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us