ADDED : நவ 05, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரை முத்துமாரியம்மன் கோவிலில் மண்டல அபி ேஷக விழா நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை ராம்ஜி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபி ேஷகம் விழா கடந்த செப்டம்பர் 15ம் தேதி நடந்தது. அன்று முதல் மண்டலம் அபி ேஷகம் துவங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்து வந்தது. 48 வது நாள் நிறைவுயொட்டி, மண்டல அபி ேஷகம் பூர்த்தி விழா நடந்தது.இதையொட்டி காலை 6.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான் சங்கல்பம், கலசபூஜை, திரவியாவதி ஹோமமும், 8.30 மணிக்கு கலசாபிேஷகம், மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.