ADDED : நவ 26, 2025 07:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரையில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துணை சபாநாயகர் ராஜவேலு நிவாரனப் பொருட்களை வழங்கினார்.
மடுகரை முத்துநகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சேகர், 55; கூலித்தொழிலாளி.இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததில், அவரது வீட்டில் இருந்த துணிகள் உள்பட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சாம்பாலனது. தகவலறிந்த துணை சபாநாயகர் ராஜவேலு பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அரசு மூலம் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.

