நுாறு நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த கோரிக்கை
நுாறு நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த கோரிக்கை
ADDED : ஜூலை 08, 2026 02:06 AM
புதுச்சேரி: நுாறு நாட்கள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என, விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
புதுச்சேரி விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை;
பா.ஜ., அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, விக்சித் பாரத் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் என, மாற்றம் செய்துள்ளது. மத்திய அரசு 125 நாட்கள் உயர்த்தி வருமானத்தை உயர்த்தியுள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை. இந்த திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். கடந்த காலத்தில் தே.ஜ., கூட்டணி அரசு மாநிலங்களுக்கு 100 சதவீதம் நிதியை அளித்திருந்த நிலையில், தற்போது, 60 சதவீதம் அளிக்க முடிவெடுத்துள்ளது. பல மாநிலங்கள் நிதி நெருக்கடியில் அல்லப்படுகின்றன.
இத் திட்டத்தில்,தொழிலாளர்களுக்கு தினசரி 384 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி 700 ரூபாயாக வழங்க வேண்டும்.
