/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஐ., உடற்தகுதி தேர்வை மீண்டும் நடத்த கோரிக்கை
/
எஸ்.ஐ., உடற்தகுதி தேர்வை மீண்டும் நடத்த கோரிக்கை
எஸ்.ஐ., உடற்தகுதி தேர்வை மீண்டும் நடத்த கோரிக்கை
எஸ்.ஐ., உடற்தகுதி தேர்வை மீண்டும் நடத்த கோரிக்கை
ADDED : பிப் 20, 2026 05:17 AM
புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் உடற்தகுதி தேர்வை குளறுபடின்றி மீண்டும் நடத்தபுதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் அறிக்கை:
புதுச்சேரியில் போலீஸ் துறையால் சமீபத்தில் நடத்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. குறிப்பாக, தொழில்நுட்ப தேர்வு நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, போலீஸ் துறைக்கு பல புகார் கடிதம் அளித்தும் அவைகளை ஏற்காமல் எழுத்து தேர்வு அறிவித்துள்ளது. எனவே, இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டுஎஸ்.ஐ., தேர்வின் மீதான குற்றச்சாட்டுகள் மீது விசாரணைநடத்தி, மீண்டும் ஒரு முறை உடற்தகுதி தேர்வை எவ்வித குளறுபடி இன்றி நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

