ADDED : செப் 14, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், மூகாம்பிகை நகர் குடியிருப்போர் நல வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நகர தலைவர் கபிலன் தலைமை தாங்கினார். செயலாளர் ரவீந்திரகமார், விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கனகன் ஏரி அருகேயுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் சரியாக இயங்காததால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது.