ADDED : பிப் 20, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கதிர்காமம் கெங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பரமணியன் 68, சுதேசி மில் ஓய்வு பெற்ற சூப்பர்வைசர். இவர் நேற்று காலை குளிப்பதற்கு சென்றுவர் குளியலறையில் வழுக்கி விழுந்தார்.
இவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவி உமாமகேஸ்வரி கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில் தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

