sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாதாள சாக்கடை குழாய் அடைப்புகளை அகற்றுவது தொடர்பான ஆய்வு கூட்டம்

/

பாதாள சாக்கடை குழாய் அடைப்புகளை அகற்றுவது தொடர்பான ஆய்வு கூட்டம்

பாதாள சாக்கடை குழாய் அடைப்புகளை அகற்றுவது தொடர்பான ஆய்வு கூட்டம்

பாதாள சாக்கடை குழாய் அடைப்புகளை அகற்றுவது தொடர்பான ஆய்வு கூட்டம்


ADDED : ஜன 23, 2025 05:19 AM

Google News

ADDED : ஜன 23, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புல்வார்டு பகுதியில் பாதாள சாக்கடை குழாய் அடைப்புகளை ரோபோக்கள் மூலம் கண்டறிந்து அகற்றுவது தொடர்பான மறுஆய்வு கூட்டம் நடந்தது.

புதுச்சேரி நகர பகுதியில் கழிவுநீரை சுத்தம் செய்து, கடலுக்குள் அனுப்ப லாஸ்பேட்டை, கனகன் ஏரி, திப்புராயப்பேட்டை பகுதியில் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, நகரின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதாளசாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசி வருகிறது.

பாதாள சாக்கடை அடைப்பிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 52 கோடி செலவில் ரோபோக்கள் மூலம் அடைப்பு பகுதியை கண்டறிந்து, அந்த இடத்தில் மட்டும் துார்வாரும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மறு ஆய்வு கூட்டம் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளபட்டு வரும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரி புல்வார்டு பகுதியில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தை செயல்படுத்தி 40 ஆண்டுகளை கடந்துவிட்டதால், குழாய்கள் பல இடங்களில் பலவீனமாக உள்ளது. இதனால், பலவீனமான பாதாள சாக்கடை குழாய்களை கண்டறிந்து மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நவீன ரோபோக்கள், கேமராக்கள் உதவியுடன் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள் ஆராயப்பட்டு, அந்த இடத்தின் கழிவுநீர் அடைப்பு துார்வாரி அகற்றப்படும். பலவீனமாக குழாய்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, புதிய குழாய்கள் பதிக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us