sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாஜி அரசு அதிகாரியிடம் மோதிரம் திருட்டு

/

மாஜி அரசு அதிகாரியிடம் மோதிரம் திருட்டு

மாஜி அரசு அதிகாரியிடம் மோதிரம் திருட்டு

மாஜி அரசு அதிகாரியிடம் மோதிரம் திருட்டு


ADDED : ஜூன் 20, 2025 02:57 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரியை திசை திரும்பி, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மோதிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொசப்பாளையம், திருமால் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் தேவநாதன், 76; ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி.

இவரது வீட்டிற்கு கடந்த 17ம் தேதி வந்த அடையாளம் தெரியாத நபர், வீடு வாடகை மற்றும் விற்பனைக்கு உள்ளதா என, கேட்டார்.

அதற்கு, தற்போது வீடு ஏதும் விற்பனைக்கு இல்லை என, தேவநாதன் கூறியுள்ளார். அப்போது, தேவநாதன் கையில் அணிந்திருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க மோதிரத்தை பார்த்து, நன்றாக உள்ளதாக கூறி, அந்த மோதிரத்தை மர்ம நபர் வாங்கி பார்த்தார்.

திடீரென அந்த நபர், தேவநாதனை திசை திருப்பி விட்டு, தங்க மோதிரத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றார். தேவநாதன் அவரை பல்வேறு இடங்களில் தேடியும், மர்மநபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தேவநாதன் புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us