ADDED : ஜன 17, 2026 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: களிஞ்சிக்குப்பம் தென் பெண்ணையாற்றில் வரும் 19ம் தேதி ஆற்றுத்திருவிழா நடக்கிறது.
களிஞ்சிக்குப்பம் தென் பெண்ணையாற்றில் தை திங்கள் 5ம் நாள் ஆற்று திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி வரும் 19ம் தேதி ஆற்றுத்திருவிழா என்படும் தீர்த்தவாரி நடக்கிறது. இதில் பண்டசோழநல்லுார், மடுகரை, கல்மண்டபம், கரியமாணிக்கம், வடுக்குப்பம், கரையாம்புத்துார் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு செல்கிறது.
அங்கு தனித்தனி பந்தலில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடுவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் செய்து வருகின்றனர்.

