ADDED : டிச 23, 2024 04:14 AM

அ நிறம் | அளவு
திருக்கனுார் : அம்பேத்கரை அவமதித்ததாக கூறி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, வி.சி., கட்சி சார்பில், திருக்கனுாரில் சாலை மறியல் நடந்தது.
தொகுதி செயலாளர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் அரிமா தமிழன், செல்வ நந்தன், எழில்மாறன் கண்டன உரையாற்றினர்.
இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
