ADDED : ஜூலை 18, 2025 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி மூலக்குளம் ஜான்குமார் நகர், சீனிவாசா நகர், ஏ.கே.டி. நகர் ஆகிய பகுதிகளில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.33 லட்சத்து 36 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.
வைத்திலிங்கம் எம்.பி.,எம்.எல்.ஏ., சிவசங்கர் ஆகியோர் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.
இதில், உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

