sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்; மாணவர்கள் பங்கேற்பு

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்; மாணவர்கள் பங்கேற்பு

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்; மாணவர்கள் பங்கேற்பு


ADDED : ஜன 24, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, நகர பகுதியில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது.

காந்தி சிலை எதிரே விழிப்புணர்வு நடைபயணத்தை துணை போக்குவரத்து ஆணையர் வினயராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து காந்தி சிலை எதிரே துவங்கி விழிப்புணர்வு நடைபயணம் செஞ்சி சாலை, மிஷன் வீதி, பாரதி பூங்காவில் நிறைவடைந்தது.

நடை பயணத்தில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும். வேக கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். சிக்னல்களை மதித்து கடை பிடிக்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது.

வாகனம் ஓட்டும்போது மொபைல்போன் பயன்படுத்த கூடாது என்று நகர பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்கள் செயற்பொறியாளர் சீதாராம ராஜூ, ஆர்.டி.ஓ., பிரபாகர ராவ் ஆகியோர் போக்குவரத்து விதிமுறைகளை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்த நடைபயணத்தில் 30 கல்லுாரிகளை சேர்ந்த 400 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us