sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இ-மெயிலில் மோசடி ரூ.2.25 லட்சம் மீட்பு

/

இ-மெயிலில் மோசடி ரூ.2.25 லட்சம் மீட்பு

இ-மெயிலில் மோசடி ரூ.2.25 லட்சம் மீட்பு

இ-மெயிலில் மோசடி ரூ.2.25 லட்சம் மீட்பு


ADDED : டிச 25, 2024 04:11 AM

Google News

ADDED : டிச 25, 2024 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : இ-மெயில் மூலம் கடன் தொகையை வசூலித்து மோசடி செய்த பணம் ரூ.2.25 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

காரைக்காலை சேர்ந்தவர் அம்பிகாபதி,55; இவர் அரசு உதவிபெறும் பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.

இவர், தனியார் நிறுவனத்தில் வாங்கிய கடனை, முன்கூட்டியே முடிப்பதற்காக, கஸ்டமர் கேரை இமெயிலில் தொடர்பு கொண்டார். அப்போது, அவருக்கு வந்த இ-மெயில் முகவரியில் கடன் தொகை ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 725யை செலுத்தினார்.பணம் செலுத்திய சில நாட்களுக்கு பிறகும், கடன் கணக்கு முடியாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அம்பிகாபதி, நிதி நிறுவனத்தை இ-மெயிலில் தொடர்பு கொண்டபோது, தங்கள் கணக்கில் எந்த பணமும் வரவில்லை எனக்கூறினர்.

இதுகுறித்து அம்பிகாபதி அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, அம்பிகாபதி பணம் கட்டிய அக்கவுண்டை முடக்கி மோசடி செய்த ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 725யை மீட்டனர். இந்த பணத்தை சீனியர் எஸ்.பி.,லட்சுமி சவுசன்யா, அம்பிகாபதியிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us