sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூன்று பேரிடம் ரூ.2.48 லட்சம் 'அபேஸ்'

/

மூன்று பேரிடம் ரூ.2.48 லட்சம் 'அபேஸ்'

மூன்று பேரிடம் ரூ.2.48 லட்சம் 'அபேஸ்'

மூன்று பேரிடம் ரூ.2.48 லட்சம் 'அபேஸ்'


ADDED : டிச 15, 2024 05:48 AM

Google News

ADDED : டிச 15, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம், 2.48 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் மஞ்சினி கண்ணையன். இவரது உறவினரின் மகன் ஒருவர், ஆன்லைன் மூலம் பிரீபையர் கேம் விளையாடினார்.

இவருடன் விளையாடிய நண்பர்கள் மற்றும் அடையாளம் தெரியாதவர்கள், அவரிடமிருந்து 74 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி எடுத்துள்ளனர்.

விநாயகபேட் பகுதியை சேர்ந்தவர் முரளி. ஆன்லைன் மூலம் காப்பீடு திட்டத்திற்கு 74 ஆயிரம் ரூபாய் கட்டி ஏமாந்தார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இந்துஜா என்பவரை தொடர்பு கொண்ட நபர், கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்.

பார்சல் தொடர்பாக, தாங்கள் அனுப்பும் செயலியை, பதவிறக்கம் செய்து, வங்கி விபரங்களை அதில், தெரிவிக்க வேண்டும் என, கூறினார்.

அதை நம்பி, அவர், வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்த அடுத்த நிமிடத்தில், அவரது கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து, 3 பேர் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us