/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 பெண்களிடம் ரூ.3.54 லட்சம் 'அபேஸ்'
/
4 பெண்களிடம் ரூ.3.54 லட்சம் 'அபேஸ்'
ADDED : நவ 06, 2025 05:38 AM
புதுச்சேரி: கதிர்காமத்தை சேர்ந்த பெண், தனது தோழி ஒருவர் பரிந்துரையின் பேரில், ஓ.ஏ.ஜி., என்ற ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 400 ரூபாய் முதலீடு செய்தார். அதன்மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், கதிர்காமத்தை சேர்ந்த மற்றொரு பெண் ஓ.ஏ.ஜி., ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 200, குருசுகுப்பத்தை சேர்ந்த பெண் 43 ஆயிரத்து 600, முருங்கப்பாக்கத்தை சேர்ந்த பெண் 18 ஆயிரம் என, 4 பெண்கள் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 54 ஆயிரத்து 200 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

