sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

6 பேரிடம் ரூ. 4 லட்சம் 'அபேஸ்'

/

6 பேரிடம் ரூ. 4 லட்சம் 'அபேஸ்'

6 பேரிடம் ரூ. 4 லட்சம் 'அபேஸ்'

6 பேரிடம் ரூ. 4 லட்சம் 'அபேஸ்'


ADDED : ஆக 14, 2025 01:21 AM

Google News

ADDED : ஆக 14, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சைபர் மோசடி கும்பலிடம் புதுச்சேரியை சேர்ந்த 6 பேர் ரூ. 4 லட்சம் ஏமாந்துள்ளனர்.

பெரிய காலாப்பட்டை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் முதலீடு செய்தார். அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.

இதேபோல், திருவண்டார்கோவிலை சேர்ந்த பெண் 63 ஆயிரத்து 300, முத்தியால்பேட்டை சேர்ந்த நபர் 75 ஆயிரம், வேல்ராம்பட்டை சேர்ந்த நபர் 87 ஆயிரம், பாகூரை சேர்ந்த நபர் 15 ஆயிரம், சண்முகாபுரத்தை சேர்ந்த நபர் 8 ஆயிரம் என, 6 பேர் மோசடி கும்பலிடம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 300 ரூபாய் இழந்துள்ளனர்.

புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us