ADDED : பிப் 12, 2026 04:38 AM

நெட்டப்பாக்கம்: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதியாண்டு மாணவர்கள், கரையாம்பத்துார் கிராமத்தில் ஊரக வேளாண் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் மக்களின் தேவைகள், வளங்கள் மற்றும் பிரச்னைகளை நேரடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கான பயிற்சி அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மற்றும் வேளாண் நிபுணர்கள் இணைந்து பி.ஆர்.ஏ., முறையின் மூலம் கிராம வரைபடம், வள வரைபடம், கால அட்டவணை, பிரச்னை பகுப்பாய்வு போன்றவை செயல் விளக்கம் அளிக்கப்பட்டன.
கிராமத்தின் நீர் ஆதாரம், விவசாய நிலங்கள், கால்நடை வளர்ப்பு, வேலை வாய்ப்புகள் போன்றவை மக்கள் பங்கேற்புடன் ஆய்வு செய்யப்பட்டன. வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் மோகன், வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

