sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சம்பா பயிர் காப்பீடு வேளாண்துறை அறிவுறுத்தல்

/

சம்பா பயிர் காப்பீடு வேளாண்துறை அறிவுறுத்தல்

சம்பா பயிர் காப்பீடு வேளாண்துறை அறிவுறுத்தல்

சம்பா பயிர் காப்பீடு வேளாண்துறை அறிவுறுத்தல்


ADDED : டிச 14, 2024 03:31 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி விவசாயிகள் சம்பா நெற்பயிரை, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

சம்பா பட்டத்திற்கு கடந்த ஜூலை 15ம் தேதி முதல் கடந்தமாதம் 15ம் தேதி வரை விதை விதைத்து, பயிர் செய்யும் விவசாயிகள் வரும் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த பகுதியிலுள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் சம்பா விதை விதைப்பு சான்றிதழ் பெற்று இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யும் போது தங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசியில் வரும் ஓ.டி.பி., எண்ணை பொது சேவை மையங்களில் அளித்து தகவல் சரிப்பார்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் தாங்கள் காப்பீடு செய்த பயிர் விவரம், நில அளவு விவரங்களை நேரடியாக சரிபார்த்து கொள்ள முடியும். மேலும் பதிவு செய்வதற்கான கட்டணம் எதுவும் விவசாயிகள் பொது சேவை மையத்தில் செலுத்த தேவையில்லை.

இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us