/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சப்தகிரி அறக்கட்டளை கரும்பு வழங்கல்
/
சப்தகிரி அறக்கட்டளை கரும்பு வழங்கல்
ADDED : ஜன 14, 2025 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொங்கலையொட்டி சப்தகிரி அறக்கட்டளை சார்பில், லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள குடும்பங்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது.
ஜீவானந்தபுரதில் உள்ள ஜலமுத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து துவங்கப்பட்டது.
தொடர்ந்து முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில், சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார் முன்னிலையில், வீடு வீடாக சென்று கரும்பு கொடுத்து பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.